முகக்கவசம் அணியாமல் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய பொருட்களை தள்ளு வண்டியில் கொண்டு சென்ற நபர் இன்று அலுத்கமாவின் தர்கா டவுனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகக்கவசம் அணியாததற்காக 40 வயதான சந்தேக நபர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ இன்று காலை சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டது.
பொருட்களை வாங்க வாகனங்களில் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தள்ளுவண்டியை கொண்டு வந்து, முகக்கவசமும் அணியாமல், பொருட்களை வாங்கி சென்ற இவரின் வீடியோ இன்று முழுவதும் வைரலாகியது.



