வெளியில் செல்ல வாகனத்தில் வைத்தியர்களின் இலச்சினையை ஒட்டிய 3 பேர் கைது!

Date:

வைத்தியர்களிற்கான இலச்சினையை தமது வாகனத்தில் ஒட்டியபடி பயணித்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாரஹேன்பிட்டி, விஜேராம மாவத்தை,  மற்றும் கொழும்பு, கோட்டை பகுதிகளில் மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்கள் வாகனங்களில் மருத்துவரின் சின்னத்தைப் பயன்படுத்தி பயணம் செய்ததாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

வெள்ளவத்தையை சேர்ந்த 39 வயதான நபர் நாரஹேன்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், அவரது வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தனது காரில் மருத்துவரின் சின்னத்தை தவறாக பயன்படுத்தியதற்காக 46 வயதான ஒருவரை சினமன்கார்டன் பொலிசார் கைது செய்தனர்.

இதே குற்றச்சாட்டில், 28 வயதான ஒருவரை கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி அஜித் ரோஹன கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்