வடக்கின் நேற்றைய கொரொனா தொற்று விபரம்: மேலுமொரு உயிரிழப்பு!

Date:

வடமாகாணத்தில் நேற்று 77 கொரோனா தொற்றாளரகள் அடையாளம் காணப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 1,272 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், யாழ் மாவட்டத்தில் 62 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், வவுனியா மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த ஒருவர்,

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர்,

வவுனியா பொது வைத்தியசாலையில் 3 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 3 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி, கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 3 பேர்,

யாழ் மாவட்டத்தில், யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேர் (71 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு.) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 3 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், மானிப்பாய் வைத்தியசாலையில் ஒருவர், கோப்பாய் வைத்தியசாலையில்  3 பேர்,

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர் (தொற்றாளர்களின் முதல்நிலை தொடர்பாளர்கள்), உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ் சிறைச்சாலையில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்