90-களில் அறிமுகமாகி ரிட்டையர்ட் ஆகாமல் விளையாடும் டாப் 3 கிரிக்கெட் வீரர்கள்!

Date:

1990களில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தற்போதுவரை விளையாடும் டாப் 3 கிரிக்கெட் வீரர்கள் குறித்த தொகுப்பு.

தற்போதைய கிரிக்கெட் உலகில் இளம் வீரர்களின் ஆதிக்கம் வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது. இதனால், மூத்த வீரர்களுக்கு XI அணியில் இடம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. நான்கு, ஐந்து போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினால் அவருக்கு வயதாகிவிட்டது, மாற்று வீரராக இந்த இளம் வீரரைத் தேர்வு செய்யலாம் என்ற பேச்சு நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அணியை எடுத்துக்கொண்டால் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சாஹல் ஆகியோர் XI அணியில் இடம் பிடித்தார்கள்.

மேலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடத்தில் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் போன்றவர்களுக்கு மாற்றாக முகமது சிராஜ், ஷார்துல் தாகூர் போன்றவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். இதனால், மூத்த வீரர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டிய நெருக்கடி உள்ளது. விக்கெட் கீப்பருகான இடத்திற்கு முதன்மை தேர்வாக இருந்த மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் இளம் வீரர்கள் கே.எல்.ராகுல் போன்றவர்களிடம் இழந்துவிட்டார்.

கிரிக்கெட் உலகில் மூத்த வீரர்களுக்கான இடங்களை இளம் வீரர்கள் இப்படித் தட்டிப்பறித்து வரும் சூழ்நிலையில் 1990ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமாகிய சிலர் இன்னும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் டாப் 3 வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

1. ஷோயப் மாலிக்:

Shoaib Malik gets green light for late departure for England | Cricket News  - Times of India

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷோயிப் மாலிக் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். 1999ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், இதுவரை 287 ஒருநாள், 113 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காகப் பங்கேற்றுள்ளார். இவர் இன்னும் ஓய்வுபெறவில்லை. பாகிஸ்தான் டி20 அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார்.

2. ஹர்பஜன் சிங்:

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி இந்திய அணிக்காக அறிமுகமானார். இதுவரை 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாகப் பந்துவீசக் கூடிய இவர், மொத்தம் 417 விக்கெட்களை சாய்த்துள்ளார். கடைசியாக 2016ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி இந்திய அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் இன்னும் ஓய்வு அறிவிக்கவில்லை. ஆஷிஸ் நெக்ரா மாதிரி தனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.

3. கிறிஸ் கெய்ல்:

மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல், டி20 கிரிக்கெட்டில் யுனிவெர்ஷல் பாஸ் ஆகத் திகழ்ந்து வருகிறார். இவருக்கு தற்போது 40 வயதாகிறது. 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமான இவர், இதுவரை 103 டெஸ்ட், 300 ஒருநாள், 52 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இவர், டி20 அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். முன்னணி பௌலர்கள் கூட கெய்லை கண்டால் சற்று நடுங்கித்தான் போவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்