ஐஎம்டிபியில் உலக அளவில் 3வது இடம் பிடித்த சூரரைப் போற்று; கொண்டாடும் ரசிகர்கள்!

Date:

ஐஎம்டிபி ரேட்டிங்கில் உலக அளவில் 3வது இடத்தை பிடித்த படமாக சூர்யாவின் சூரரைப் போற்று புது சாதனை படைத்திருக்கிறது. இந்த சாதனையை பார்த்து சூர்யா ரசிகர்கள் கொண்டாட்ட மூடில் இருக்கிறார்கள்.

ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்கிற பெயரில் படமாக்கி அதை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட்டார் சுதா கொங்கரா. கொரோனா வைரஸ் பிரச்சனையால் சூரரைப் போற்று படத்தை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் போனது.

சூரரைப் போற்று படத்தை பார்த்த அனைவரும் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோரை பாராட்டினார்கள். இதெல்லாம் தியேட்டர் ரிலீஸ் செய்ய வேண்டிய படம். சூரர் மட்டும் தியேட்டரில் வந்திருந்தால் திருவிழாக்கோலமாக இருந்திருக்கும் என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சூரரைப் போற்று படம் புது சாதனை படைத்திருக்கிறது. ஒரு புதுப்படம் வெளியானால் அதற்கு ஐஎம்டிபி இணையதளத்தில் எவ்வளவு ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. சினிமா ரசிகர்களின் நம்பிக்கையை பெற்ற இணையதளமாக இருக்கிறது ஐஎம்டிபி.

அந்த ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் கிடைப்பது பெரிய விஷயம். இந்நிலையில் ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற படங்களில் 3வது இடம் சூரரைப் போற்றுக்கு கிடைத்திருக்கிறது. சூரரைப் போற்று படத்திற்கு 9.1 ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்(1994), தி காட்ஃபாதர்(1972) ஹாலிவுட் படங்களை அடுத்து சூரரைப் போற்றுக்கு தான் அதிக ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இந்த சாதனை குறித்து அறிந்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அது குறித்து சமூக வலைதளங்களில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சூரரைப் போற்று படைத்துள்ள சாதனை குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பெருமையாக தெரிவித்திருக்கிறார் சமந்தா.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சூர்யா சாரின் ரசிகராக இதை படிக்க சந்தோஷப்படுகிறேன். சூரரைப் போற்று மிகவும் பிடித்திருந்தது. அதற்கு இதுவும், இதைவிடவும் பாராட்டுகள் வருவது தகும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் ஆகிய பிரிவுகளில் சூரரைப் போற்று படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்