நேற்று நள்ளிரவு 11 மணி முதல் திங்கள் அதிகாலை நான்கு மணி வரை அமுலில்
உள்ள பயணத் தடை காரணமாக கிளிநொச்சி மாவட்டமும் வெறிச்சோடி காணப்பட்டது.
ஏ9 பிரதான வீதியில் வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.
மக்களின் நடமாட்டம் இன்றி வீதி வெறிசோடியிருந்தது. இருப்பினும்
வைத்தியசாலைக்கு செல்பவர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் பயணங்களை
மேற்கொண்டிருந்தனர்.அத்தோடு நோயாளர் காவு வண்டியும் வீதியில்
காணமுடிந்தது.
வீதியெங்கும் இராணுவத்தினர் கடமையிலிருந்தனர் . ஒலிபெருக்கி
பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உந்துருளிகளிலும் இராணுவத்தினர்
ஆங்காங்கே கடமைகளில் இருந்தனர்.





