இலங்கையில் சிறுவர்களை குறிவைக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்!

Date:

டெங்கு காய்ச்சல் உட்பட மேலும் சில வகை வைரஸ் காய்ச்சல்கள் நாட்டில் காணப்படுவதாகவும் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டும் என்றும் சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வரும் அதேவேளை சில வகை வைரஸ் காய்ச்சல் தொடர்பில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் சிறுவர்கள் மத்தியில் காணப்படுகிறது காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவையே நோயின் அறிகுறிகளாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சிலருக்கு டெங்கு அல்லது அதற்கு சமமான நோய் அறிகுறிகள் தென்படலாம். எனினும் அது கொரோனா  வைரஸ் பாதிப்பு அல்ல. அது வேறொரு வகை வைரசின் தாக்கம். நாட்டின் மேலும் சில பகுதிகளில் சிறுவர்கள் மத்தியில் வாயை சுற்றி புண்கள் ஏற்படுகின்றன. கை, கால்களில் சிவப்பு பரு போன்று உருவாகின்றன. அது தொடர்பில் தகவல்கள் கிடைத்து வருகின்றன. அவ்வாறு காணப்படும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம். உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது என அறிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பெண்கள், சிறுவர்களை இலக்காகக் கொண்ட ஆபாச Facebook குழுக்கள் முடக்கம்

பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் ஆபாச புகைப்படங்கள் மற்றும்...

உயர் நடுத்தர வருமான நாடாக இலங்கை: தடுப்பூசிகளுக்கான சலுகைகள் இழப்பு!

உலக வங்கியின் புதிய வருமான வகைப்பாட்டின் கீழ் இலங்கை உயர் நடுத்தர...

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்