இளம்பெண்ணுடன் அத்துமீறல் குற்றச்சாட்டு: புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பரபரப்பு!

Date:

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் இளம் பெண்ணுடன் நிர்வாக உத்தியோகத்தர் முறையற்ற விதமாக நடந்தார் என குறிப்பிட்டு, அமைதியின்மை ஏற்பட்டது.

ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக பெருமளவானவர்கள் குவிந்ததையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.

புதுக்குடியிருப்பு நகருக்கு அண்மையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் இன்று (5) மாலைப் பொழுதில் இந்த சம்பவம் நடந்தது.

அங்கு பணிபுரியும் இளம் குடும்பப் பெண்ணொருவரை, பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் தவறாக அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இன்று மாலை பணி முடிந்த பின்னர், வீடு திரும்பிய இளம்பெண், வீட்டில் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 100 பேர் வரையில் திரண்டு, ஆடைத் தொழிற்சாலை வாயிலை முற்றுகையிட்டனர்.

குற்றம்சுமத்தப்பட்ட நபரை தொழிற்சாலைக்கு வெளியில் வருமாறு கிராம மக்கள் அழைத்தனர்.

ஆடைத்தொழிற்சாலை நிர்வாகம் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து, நிலைமையை கட்டுப்படுத்தினர்.

அங்கு குவிந்திருந்த மக்களை அப்புறப்படுத்தினர். குறிப்பிட்ட பெண்ணிடம் ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின் அதை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு குறிப்பிட்டனர்.

அத்துடன், குற்றம்சாட்டப்பட்ட நபரையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்