சாணக்கியனிடம் பணவசதியுள்ளது; வாலிபர் முன்னணி பொறுப்பை வழங்குங்கள்: சிறிதரன் சர்ச்சை பரிந்துரை!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவராக இரா.சாணக்கியனை நியமிக்க வேண்டும். அவரிடம் பண வசதியுள்ளது. அவர் நன்றாக வேலை செய்வார் என சிபாரிசு செய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (27) இடம்பெற்ற போது இந்த பரிந்துரையை வைத்தார்.

“இரா.சாணக்கியனிற்கு வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவுண்டு. அவரிடம் பணவசதிகளுமுண்டு. அவர் நன்றாக வேலை செய்வார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணிணி தலைவராக இப்போதுள்ள சேயோனை நீக்கி விட்டு, சாணக்கியனை தலைவராக்கலாம்“ என யோசனை தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் நீண்ட செயற்பாட்டு பாரம்பரியத்தை கொண்டவர். கிழக்கில் சாதாரண உறுப்பினராக ஆரம்பித்து நெருக்கடியான காலகட்டங்களிலும் கட்சி செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பணவசதி இருக்கும் காரணத்தினால் சாணக்கியனிற்கு அந்த பொறுப்பை வழங்க வேண்டும், பணவசதியில்லாததால் சேயோனை அதிலிருந்து நீக்க வேண்டுமென்ற சாரப்பட சி.சிறிதரன் குறிப்பிட்டது கட்சிக்குள் பரவலான அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்