300 கிலோ ஹெரோயின், ஆயுதங்களுடன் இலங்கை மீன்பிடி படகு மடக்கிப் பிடிப்பு!

Date:

போதைப் பொருள் கடத்தி வந்த இலங்கையின் மீன்பிடிப் படகை கேரள மாநிலம் விழிஞ்சியம் அருகே சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

அந்தப் படகில் இருந்த 300 கிலோ 323 கிராம் எடை கொண்ட ஹெரோயின், 5 ஏகே.47 துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள், மற்றும் பல முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

‘ரவிஹன்சி’ என்ற அந்த படகில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உளவுத்துறையினர் போதைப் பொருள் கும்பலின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு தகவல் அளித்ததன் பேரில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்