ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு மாறாக அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்க அமைச்சுப் பதவிகளைப் பெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




