UPDATE: காலை 6 மணியுடன் ஊரடங்கு சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மோசமான பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான பொருளாதார முகாமைத்துவமே காரணமென்பதை சுட்டிக்காட்டி, அவரை பதவி விலக வலிறுத்தி ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தலைநகர் கொழும்பில் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை இலங்கை காவல்துறை விதித்துள்ளது.
A protest is being staged along the road leading to President Gotabaya Rajapaksa’s residence in Pengiriwatte, Mirihana. More than 400 protesters were witnessed chanting slogans #gogotago and #gohomegota.#srilanka #lka pic.twitter.com/FTiAXlwlox
— NewsRadio – TNLRN (@newsradiolk) March 31, 2022
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ பஸ் மற்றும் பல வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டக்காரர்கள் நடு இரவு கடந்தும் அந்த இடத்தில் தங்கி வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
Breaking News:
Protests continue in Mirihana pic.twitter.com/KQW7v2s5X1
— DailyMirror (@Dailymirror_SL) March 31, 2022
இதற்கிடையில், அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக இராணுவம் மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த சுமார் 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆறு பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
https://twitter.com/i/status/1509603738939707395
காயமடைந்தவர்களில் சம்பவத்தை செய்தி வெளியிட்ட பல ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரியவருகிறது.
I warned the Police driver to not to go near them, he went!
These are guards of President house, Protesters sent them away! #GoHomeRajapaksha #GoHomeGota2022 pic.twitter.com/zxYSf55jqr
— Nuzly 🇵🇸 𓂆 (@nuzlyhameem) March 31, 2022
சம்பவத்தை தொடர்;து 6 பொலிஸ் பிரிவுகளிற்கு ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.
Situation under control at the Mirihana, president residence. pic.twitter.com/7wJwzNuCXa
— Arosha Fernando (@sandunarosha) March 31, 2022
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட, களனி
கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளிற்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.





