முன்னாள் காதலியின் பேஸ்புக்கிற்குள் ஊடுருவி, அந்த யுவதியின் நிர்வாணப் புகைப்படங்களை அதில் பதிவிட்ட சைக்கோ காதலனிற்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலாகவும், இணையத்தின் கட்டற்ற சுதந்திரத்தை பயன்படுத்தியும் பெண்களிற்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து செல்லும் காலத்தில், இலங்கை நீதிமன்றமொன்று வழங்கிய தீர்ப்பு கவனம் பெற்றுள்ளது.
காதலிக்கும் காலத்தில்- தனது 22 வயதில்- காதலனை நம்பி அனுப்பிய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பழிதீர்த்துள்ளான் சைக்கோ காதலன்.
சமூக அவமானங்களையும் சகித்துக் கொண்டு படித்து, தாதியாகி, நீதிக்கான போராட்டத்தை நடத்தி வெற்றியடைந்த யுவதியின் கதை இது.




