யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த ரௌடிக்குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில், தாவடிபகுதிய சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரே நேற்று இரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல வாள்வெட்டு, வீடுகளை சேதமாக்குவது போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரென இவர் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்தவர்.
தலைமறைவாக இருந்த இளைஞன், நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.



