தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் எதிர்வரும் 15ஆம் திகதி சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் மாலை 3.30 மணிக்கு சந்திப்பு இடம்பெறும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பல முறை முயன்றது. எனினும், ஜனாதிபதி அதற்கு நேரம் ஒதுக்கியிருக்கவில்லை.
அண்மையில் ஜனாதிபதி மாளிகையின் முன்பாக தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்போது, ஜனாதிபதி மாளிகை அதிகாரியொருவர் வந்து, அடுத்த வாரத்தில் சந்திக்கை ஒழுங்கமைப்பதாக கூறியிருந்தார்.
மகாவலி காணி அபகரிப்பு தொடர்பில் அந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதால் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்சவையும் சந்திப்பிற்கு அழைப்பதாக ஜனாதிபதி மாளிகை பிரதிநிதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



