திட்டமிட்டபடி இலங்கைக்கு திரவ இயற்கை எரிவாயுவை (LNG) வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக New Fortress Energy தெரிவித்துள்ளது.
யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் நிராகரித்தமை தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பிற்கு அருகில் எல்என்ஜி முனையத்தை நிர்மாணிக்க நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் 2021 செப்டெம்பர் மாதம் உடன்பாட்டை எட்டியதாக நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி தெரிவித்துள்ளது.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய வளாகத்திற்கு எரிவாயு விநியோகிக்கும் உரிமையும் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜிக்கு இருக்கும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்நிறுவனம் முதலில் தினமும் 1.2 மில்லியன் கேலன் எல்என்ஜியை அரசுக்கு வழங்கும்.



