27.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் தொடர்ந்து இயங்குவது சிரமம்: இலங்கை மின்சாரசபை!

நிலவும் சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் முன்னோக்கிச் செல்வது சவாலானது என்று இலங்கை மின்சார சபையின் நிறுவன மூலோபாயம் மற்றும் ஒழுங்குமுறை உறவுகளின் பிரதிப் பொது முகாமையாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.

இதுவரையில் விலை அதிகரிப்புக்கு உட்படாத ஒரே சேவை மின்சாரம் என்று வீரரத்ன கூறியதுடன், தற்போதைய விலை நிர்ணயத்தை இனியும் பேண முடியாது என்றார்.

மழை இல்லாததால் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை என்றும், ஏப்ரல் மாதத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

மின்சார சபை அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால் அனல் மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிக்க டீசல், நாப்தா மற்றும் ஃபர்னஸ் ஓயில் தேவைப்படுகிறது. இந்த மூன்று வகையான எரிபொருள்களை பெறுவதற்கு நிதி தேவைப்படுகிறது.

பணம் செலுத்தாமல் எரிபொருளை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!