சுயதனிமைப்பட்டார் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன்!

Date:

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சுயதனிமைப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

வி.மணிவண்ணனின் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வு கடந்த 20ஆம் திகதி பருத்தித்துறையில் நடந்தது. அதில் மணிவண்ணனும் கலந்து கொண்டார்.

அந்த நண்பருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்ட வி.மணிவண்ணன், இன்று காலை பிசிஆர் சோதனை செய்தார்.

இதனால், இன்று மாநகரசபை அமர்வு நடைபெறவிருந்த நிலையில், பிற்போடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...

கைதான 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கும் விளக்கமறியல்

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்