27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இலங்கை

புகையிரத கடவை மூடப்பட்ட நிலையிலும் உள்ளே நுழைந்தவர் பலி!

மாவிட்டபுரத்தில் உள்ள பாதுகாப்பான கடவையில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (26) காலை இந்த விபத்து நேர்ந்தது.

புகையிரதம் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில், அறியாமையால் பயணிக்க முற்பட்டவேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளை ஈ தாக்கமும் அதன் கட்டுப்பாட்டு பொறிமுறைகளும்

Pagetamil

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தலைமறைவு: வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

‘யாழ் போதனா வைத்தியசாலை சர்ச்சைக்கு இதுதான் காரணம்’: தாதியர் சங்கம் சொல்லும் காரணம்!

Pagetamil

‘ஊடகப் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவோம்’: அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதி

Pagetamil

தேங்காய் விலை வழமைக்கு திரும்பும்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!