தாயின் சடலத்திற்கு உணவூட்டி பாதுகாத்து வந்த மகள்: இலங்கையில்தான் சம்பவம்!

Date:

உயிரிழந்த தனது தாயின் சடலத்தை கடந்த 14 நாட்களுக்கும் மேலாக வீட்டில் வைத்து உணவூட்டி வந்த மகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

45 வயதான மகள், மனநோயினால் பாதிக்கப்பட்டவர்.

நுகேகொட, தெல்கந்த, பகிரிவத்த, சோம தலகல மாவத்தையில் வசிக்கும் வேரபிட்டிய பகுதியைச் சேர்ந்த பத்மினி பத்திரன என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் பிரதேசவாசிகள் கடந்த 23ஆம் திகதி மாலை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

பொலிசார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சாப்பாட்டு அறையில் தாயின் உடல் தரையில் கிடந்தது. சடலம் மிகவும் உருகிய நிலையில் காணப்பட்டதாகவும், வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்டுள்ள மகளும் உயிரிழந்த தாய்க்கு அருகில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் தாயின் சடலத்திற்கு உணவூட்டியுமுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகளால் இந்த தாய் கொல்லப்பட்டாரா? அல்லது தாய் இயற்கை எய்தினார்களா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்