ரஷ்யாவிடம் சரணடையாமல் தீவைக் காப்பாற்ற கடைசிவரை போராடி மடிந்த 13 உக்ரைனிய வீரர்கள்!

Date:

உக்ரைனின் ஸ்மின்யி தீவில் ரஷ்யத் தாக்குதலில் மரணித்த 13 வீரர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விருதளித்துள்ளது.

ரஷ்யப் போர்ப்படையிடம் சரணடையாமல் ‘சாவதே மேல்’ என்று கருதிய அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.

அவர்கள் கருங்கடலில் பணியில் ஈடுபட்டிருந்ததாக அறிக்கைகள் சுட்டின. இவர்களைச் சரணடையும்படி ரஷ்யப் போர்க்கப்பல்கள் வலியுறுத்தியிருக்கின்றன. அப்படிச் செய்ய மறுத்தால் அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவை அச்சுறுத்தியிருக்கின்றன.

அந்த வீரர்கள் அதற்கு அடிபணியவில்லை. உயிரைப் பணயம் வைத்து ஸ்மின்யி தீவை அவர்கள் தற்காத்தனர்.

அவர்களது மரணத்தை உறுதிசெய்த உக்ரைனிய ஜனாதிபதி அவர்களது துணிச்சலைப் பாராட்டி அவர்களுக்கு ‘உக்ரைனின் நாயகர்கள்’ என்ற விருதை வழங்கினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்