வார இறுதி நாட்களில் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இது தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை (26) ஏ, பி மற்றும் சி பகுதிகளுக்கு மாத்திரம் பகல் வேளையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
இதேவேளை, ஏனைய பிரதேசங்களில் நாளை (26) பகல் வேளையில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (27) ஏ, பி மற்றும் சி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாதுர்.
ஞாயிற்றுக்கிழமை (27) பகல் வேளையில் A, B, C ஆகிய பகுதிகளுக்கு 2 1/2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.



