வவுனியா நகரில் இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!

Date:

வவுனியா நகரில் இடம்பெற்று வரும் குற்ற செயல்களை தடுப்பதற்கு நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

வவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையில் நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் வர்த்தகர்களின் பங்களிப்பில் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் வவுனியா தலைமை பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில் குறித்த கமராக்கள் அனைத்தும் கண்காணிப்படுவதற்கும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வர்த்தக நிலையங்கள் , நகருக்கு வரும் பயணிகளின் நன்மை கருதியும் நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்கவுமே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்