பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மான், இந்தியன் ஓயில் நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியதையடுத்து, எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியன் ஓயில் நிறுவன விலையேற்றமானது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையை அதிகரிக்க வழி வகுக்கும் எனவும், விலைகளை அதிகரிக்காவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.




