பொலிஸ் நிலையத்தில் மனைவியின் முகத்தில் அசிட் வீசிய கணவன்!

Date:

பொலிஸ் நிலையத்தில் கணவரின் அசிட் தாக்கிதலால் கடுமையான காயங்களுக்கு ஆளான பெண்ணொருவர் காலி-கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் நேற்று (21) காலை காலியில் உள்ள உடுகம பொலிஸ் நிலையத்தில் அசிட் தாக்குதலை நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.

தம்பதியினரிடையேயான ஏற்பட்ட குடும்ப தகராறு குறித்து விசாரிக்க பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர். அங்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனைவியின் முகத்தில் திடீரென அசிட் வீசினார்.

அசிட் தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தார்.

சந்தேகநபர் உடுகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் 28 வயதுடையவர். சந்தேகநபரான கணவர் 32 வயதுடையவர்.

spot_imgspot_img

More like this
Related

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...

நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்