24.6 C
Jaffna
March 7, 2025
Pagetamil
இலங்கை

பெரும்போக விளைச்சலில் பெரும் வீழ்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது பெரும்போக பயிர்ச் செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விளைச்சல் மிக குறைவாகவே காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது ஒரு ஏக்கர் வயலில் 12-15 வரையான மூட்டை நெல்லையே அறுவடை செய்ய முடிந்துள்ளது. இம்முறை இயற்கை எமக்கு கை கொடுத்துள்ள போதிலும் அரசாங்கத்தினால் இரசாயன உரம் வழங்கப்படாமையின் காரணமாகவே பெரும் போக செய்கையில் நட்டமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த வருடம் ஒரு ஏக்கர் வயலில் 30- 40வரையான மூட்டைகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இம் முறை அரசாங்கத்தினால் கமநலசேவையின் ஊடாக வழங்கப்பட்ட சேதன உரம் மற்றும் திரவ உரம் என்பனவற்றையே பயன்படுத்தியதாகவும், அவற்றினால் எந்த பலனும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்தநிலை தொடருமாயின் பெரும்போக பயிர்செய்கையினை கைவிடுவதை விட வேறு வழியில்லையென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கச்சதீவு திருவிழா ஏற்பாட்டு கலந்துரையாடல்

Pagetamil

தத்தெடுத்த குழந்தை கொலை: தம்பதிக்கு மரணதண்டனை!

Pagetamil

சாணக்கியன் எழுப்பிய பாதுகாப்பு கவலைகள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்

Pagetamil

ஆபிரிக்க காய்ச்சல் பரவிய வடக்கின் 5 பன்றிப்பண்ணைகள் மூடல்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!