பெரும்போக விளைச்சலில் பெரும் வீழ்ச்சி!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது பெரும்போக பயிர்ச் செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விளைச்சல் மிக குறைவாகவே காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது ஒரு ஏக்கர் வயலில் 12-15 வரையான மூட்டை நெல்லையே அறுவடை செய்ய முடிந்துள்ளது. இம்முறை இயற்கை எமக்கு கை கொடுத்துள்ள போதிலும் அரசாங்கத்தினால் இரசாயன உரம் வழங்கப்படாமையின் காரணமாகவே பெரும் போக செய்கையில் நட்டமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த வருடம் ஒரு ஏக்கர் வயலில் 30- 40வரையான மூட்டைகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இம் முறை அரசாங்கத்தினால் கமநலசேவையின் ஊடாக வழங்கப்பட்ட சேதன உரம் மற்றும் திரவ உரம் என்பனவற்றையே பயன்படுத்தியதாகவும், அவற்றினால் எந்த பலனும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்தநிலை தொடருமாயின் பெரும்போக பயிர்செய்கையினை கைவிடுவதை விட வேறு வழியில்லையென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்