பெரும்போக விளைச்சலில் பெரும் வீழ்ச்சி!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது பெரும்போக பயிர்ச் செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விளைச்சல் மிக குறைவாகவே காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது ஒரு ஏக்கர் வயலில் 12-15 வரையான மூட்டை நெல்லையே அறுவடை செய்ய முடிந்துள்ளது. இம்முறை இயற்கை எமக்கு கை கொடுத்துள்ள போதிலும் அரசாங்கத்தினால் இரசாயன உரம் வழங்கப்படாமையின் காரணமாகவே பெரும் போக செய்கையில் நட்டமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த வருடம் ஒரு ஏக்கர் வயலில் 30- 40வரையான மூட்டைகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இம் முறை அரசாங்கத்தினால் கமநலசேவையின் ஊடாக வழங்கப்பட்ட சேதன உரம் மற்றும் திரவ உரம் என்பனவற்றையே பயன்படுத்தியதாகவும், அவற்றினால் எந்த பலனும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்தநிலை தொடருமாயின் பெரும்போக பயிர்செய்கையினை கைவிடுவதை விட வேறு வழியில்லையென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்