27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

தனியார் நிறுவனத்தின் விமான சேவை இடைநிறுத்தம்!

சகுராய் விமான சேவையின் அனைத்து சேவைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள், இரண்டாவது அவசரத் தரையிறக்கத்தைத் தொடர்ந்து நிறுவனத்தின் விமானச் செயல்பாடுகளை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது.

இடைநிறுத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்.

நிறுவனத்திற்கு சொந்தமான Cessna 172 என்ற தனியார் இலகுரக விமானம் இன்று பிற்பகல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டான கிம்புலாபிட்டியவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சீகிரியாவிற்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த தம்பதியரை இரண்டு விமானிகள் ஏற்றிக்கொண்டு கொக்கல நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இலகுரக பயிற்சி விமானம் கடந்த வாரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயாகலைக்கும் பேருவளைக்கும் இடையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

east tamil

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் கைது

east tamil

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சட்டத்தரணிகள் குழு அமைப்பு

east tamil

பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்

east tamil

அந்தார்ட்டிக்கா மலையில் முதலில் ஏறிய இலங்கையர்

east tamil

Leave a Comment