பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!

Date:

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் இன்று (24) இரவு 7 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘பொருட்களின் விலைகளை குறை, அரசே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, பெற்றோலின் விலையை குறை, பாணின் விலையைக் குறை’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்களான ரசிக்கா பிரியதர்சினி, கருணாதாச உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்