டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் பதிவாகிய அமைதியின்மை தொடர்பில் ஆராய சபை சபாநாயகரால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்த குழு அமைக்கப்படவுள்ளது.
அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், அனுரபிரியதர்ஷன யாப்பா, ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ.சுமந்திரன், விஜித ஹேரத், கயந்த கருணாதிலக ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.




