இராணுவத்தின் 59வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (7) நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 58வது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மேஜர் ஜெனரல் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே கஜபா படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் புதிய நியமனத்திற்கு முன்னர் தொண்டர் படையின் தளபதியாக கடமையாற்றினார்.




