29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

22 நாட்களின் பின் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் இயங்குகிறது!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று (7) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் 22 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு, கச்சா எண்ணெய் கொள்வனவிற்கு பதிலாக டீசல், பெற்றோல், மருந்து மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் நோக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் கம்மன்பில முன்னர் தெரிவித்திருந்தார்.

எனவே, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு கையிருப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அமைச்சர்.

கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, அன்னியச் செலாவணி நிலைமை தீரும் வரை, பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கு அன்னிய கையிருப்பு செலுத்தப்படும் என்றும், எனவே, சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment