பிரியந்த குமாரவின் உடல் எச்சங்கள் தாங்கிய பேழை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது!

Date:

பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் அடிப்படைவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவதனவின் உடல் எச்சங்களை தாங்கிய பேழை இன்று அதிகாலை 3.00 மணியளவில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள ராஜ்கோ இன்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலையின் முன்னாள் பொது முகாமையாளர் பிரியந்த குமார தியவதன கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

கொல்லப்பட்ட பிரியந்தவின் உடலுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு, சீல் வைக்கப்பட்ட பேழையில் வைக்கப்பட்டு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று மாலை 5.10 மணியளவில் பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் எச்சங்கள், நீர்கொழும்பு நீதித்துறை விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் இளங்கரத்ன மற்றும் குருநாகல் நீதித்துறை வைத்திய அதிகாரி அஜித் ஜயசிங்க ஆகியோரினால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்