25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

மாவீரர் நினைவேந்தல் தொடர்பாக தமிழரசு கட்சியின் தீவக முக்கியஸ்தர்களை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு

மாவீரர் நினைவேந்தல் தொடர்பாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகுமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளர் கருணாகரன் நாவலன், தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வாலிப முன்னணி செயலாளர் கருணாகரன் குணாளன், ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் அம்பலம் கனகையா, ஊர்காவற்துறை தொகுதி கிளையின் நிர்வாக கிளை உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற், ரமேஷ் றமில்டன், ருத்ரன் ஆகியோருக்கு ஊர்காவற்துறை பொலிசாரினால் வழங்கப்பட்டிருந்த உத்தரவுக்கிணங்க இன்று அத்தரப்பினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இவர்கள் சார்பாக சட்டத்தரணி அருட்பிரகாசம் நிரோஷன் ஆஜராகியிருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கு நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

east tamil

Leave a Comment