24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இந்தியா

கட்டை விரல் ட்ரீட்மெண்ட்… கள்ளக்குறிச்சியில் ஜெய்பீம் சம்பவம்: வீடியோ சாட்சியால் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் புகார் கூறி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த பட்டியல் இனக் குறவர் சமூகத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், கடந்த நவம்பர் 14ஆம் தேதி தனது கணவர் பிரகாஷ் மற்றும் உறவினர் தர்மராஜ் இருவரையும் குற்றப்பிரிவு சிறப்பு போலீஸார் நள்ளிரவில் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுவரை அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடயே மீண்டும் ஊருக்குள் வந்த காவல் துறையினர் புவனேஸ்வரி – பிரகாஷ் தம்பதியின் உறவினர்களான பரமசிவம் (42), சக்திவேல் (29) ஆகிய மேலும் இருவரையும் வேனில் அழைத்துச் சென்றதாக புவனேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, பிரகாஷ், தர்மராஜ் ஆகியோர் (நவம்பர் 18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்றாவது நபரான சக்திவேல் பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் தற்போது அவர் விழுப்புரம் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் கூறியதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் போலீஸார் எப்படி தங்களை சித்திரவதை செய்தார்கள் என்பதை குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், தில்லை நகரைச் சேர்ந்த பட்டியல் இனக் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கள்ளக்குறிச்சி போலீசாரால் வாரண்ட் இல்லாமல் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றுள்ளனர். போலீசார் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அவர்கள் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்த விவகாத்தில் போலீஸார் கூறுகையில், திருட்டுக் குற்றத்தில் மூன்று பேரின் கைரேகை பொருந்துகிறது என்றும் மற்ற 2 பேர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். ஆனால், மற்றவர்கல் விடுவிக்கப்படவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தர்மராஜ் மற்றும் பிரகாஷ் இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் போலீசார் சக்திவேலை நெஞ்சுவலி என்று கூறி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்கள் 3 பேர் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், சின்ன சேலம், கொங்கரம்பாளையம் செல்வம் (48) என்பவர் காவல்துறையின் வன்முறை பற்றி கூறியிருப்பது அப்படியே ஜெய் பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற காவல் நிலைய சித்திரவதையை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.

போலீசார் கண்களைக் கட்டி அழைத்துச் சென்றதாகவும், கம்பால் அடித்து சித்திரவதை செய்ததையும் கூறுகிறார். மேலும், இரண்டு கைகளிலும் கட்டவிரலில் கயிறு கட்டி தொங்கவிட்டு அடித்து சித்திரவதை செய்தார்கள் என்பதை நடுக்கத்துடன் கூறுகிறார். செல்வம் கூறுவது அப்படியே ஜெய் பீம் திரைப்படத்தில் நடக்கும் போலீஸ் சித்திரவதை செய்யும் கட்சியை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதில் வழிப்பறி, கொள்ளை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக 3 பேரின் கை ரேகைகள் ஒத்துப்போகின்றன. மற்ற இரண்டு பேர்கள் செல்வம், பரமசிவம் இருவரையும் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டோம்.

பிடிபட்டவர்கள் சின்ன சேலம், கீழ் குப்பம், கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

மூன்றாவது குற்றவாளியான சக்திவேல் தற்போது மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சக்திவேலை மிகவும் அடித்து துன்புறுத்தி உள்ளதாக சக்திவேலின் மனைவி கஸ்தூரி கண்ணீர் மல்க தெரிவிக்கிறார், தான் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் இந்த சமயத்தில் தன் கணவர் மீது பொய் வழக்கு சுமத்தி துன்புறுத்தி தற்போது மருத்துவமனையில் அனுமதித்த தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் நாங்கள் பட்டினி கிடக்கக் கூடிய சூழ்நிலையில் உள்ளம் தற்போது இந்த சம்பவத்தால் வேலைக்குச் சென்றம் சரியாக உணவு அருந்தி யும் பல நாட்கள் ஆகிவிட்டது என வருத்தத்துடன் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு தனி கவனம் கொண்டு உரிய நீதி வழங்க வேண்டும் எனவும் கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment