விபச்சார விளம்பரங்களை இணையத்தில் வெளியிட்டு, விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று அழகிகளை மகரகம பொலிசார் கைது செய்துள்ளனர்.
21 வயது யுவதி, 28 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார், 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஆகியோரே கைதாகியுள்ளனர்.
அவர்கள் பசறை, வலஸ்முல்ல குருநாகல் பகுதிகளை சேர்ந்தவர்கள்.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதாக வீடுகளில் கூறி, கொழும்பில் தங்கியிருந்து கடந்த சில வருடங்களாக அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இணையத்தளத்தை பயன்படுத்தி இவர்கள் விபச்சார விளம்பரம் செய்துள்ளனர். தமது பல்வேறு ஆபாச படங்களை பதிவேற்றி, கட்டணம் மற்றும் வாடிக்கையாளர்களிற்கு கிடைக்கும் வசதிகளை குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் பற்றிய தகவல் கிடைத்ததும், நேற்று கைது செய்யப்பட்டனர்.



