25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

கெபித்திகொல்லாவ கல்வி வலயத்தில் 4 பாடசாலைகள் மூடப்பட்டன!

பல பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக கெபித்திகொல்லாவ கல்வி வலயத்திலுள்ள நான்கு பாடசாலைகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் குமுதுனி ஆரியவன்ச இன்று (09) தெரிவித்தார்.

மேலும், வாஹல்கட டி2 பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால், அந்த ஆசிரியர் பணிபுரிந்த மூன்று வகுப்புகள் மூடப்பட்டுள்ளன. .38 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தங்கியிருந்த வீட்டு உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (08) அப்பகுதியில் நடத்தப்பட்ட விரைவான ஆன்டிஜென் சோதனையில் 26 பேர் கொரோனா நோயாளிகள் என உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளும் அடங்குகின்றனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 8ஆம் திகதி 250 இற்கும் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் அநுராதபுரம் மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

சட்டவிரோதமாக வாகனத்தை பதிவு செய்த தொழிலதிபர் ஒருவர் கைது

east tamil

நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

east tamil

35000 பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு

east tamil

விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

Leave a Comment