சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyota Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் வாகன தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மொரொன்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் என கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை மேற்கொண்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பெப்ரவரி 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




