அரசாங்கத்தில் விரக்தியடைந்திருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியை மாற்றாக இன்னும் மக்கள் பார்க்கவில்லை: சரத் பொன்சேகா!

Date:

தற்போதைய ஆட்சியில் மக்கள் விரக்தியடைந்துள்ள போதும், ஐக்கிய மக்கள் சக்தியை ஒரு மாற்றீடாக இன்னும் மக்கள் பார்க்கவில்லை. வினைத்திறனான பிரச்சார இயந்திரத்தின் மூலம் விரக்தியடைந்துள்ள பொதுஜன பெரமுனவின் அடிமட்ட உறுப்பினர்களை கவர்ந்திழுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மீரிகமவில் நேற்று (7) நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் தட்டில் வைத்து அரசியல் வெற்றியை பெற்றுக்கொடுக்காத நிலையில் அதனை நோக்கி உழைக்க வேண்டும் என்றார்.

“தற்போதைய அரசாங்கத்தால் சலிப்படைந்துள்ள போதிலும் அரசாங்கத்தை நடத்தும் திறன் கொண்ட கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் பார்க்கவில்லை. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து வாக்களித்தவர்களில் 50 வீதமானவர்கள் இன்று விரக்தியடைந்துள்ளனர். இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு மாற்று என்று அவர்கள் நினைக்கவில்லை, எனவே நாங்கள் எங்கள் பிரச்சார இயந்திரத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.

“ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக மற்றும் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“நல்லாட்சி அரசாங்கம் ஊழல்வாதிகளை சிறைக்குள் அனுப்புவதாக உறுதியளித்தது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் பொது நிதியையும் கொள்ளையடித்தனர். இலங்கையின் முன்னாள் தலைவர்கள் எயார்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் மில்லியன் கணக்கான டொலர்களை கொள்ளையடித்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் எயார்பஸ் நிறுவனத்திற்கு பெரும் தொகையை செலுத்தி அதனை ரத்து செய்தது. சில நல்லாட்சி அரசாங்க அரசியல்வாதிகள் 20 மில்லியன் டொலர்களை தங்களுடைய பாக்கெட்டுகளில் போட்டுள்ளனர்.அதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களே பொறுப்பு” என்றும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்