29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

இலங்கையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு: 3 நாட்களில் செலுத்தக் கோருகிறது சீன நிறுவனம்!

இலங்கைக்கு கரிம உரம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட சீன கரிம உர உற்பத்தியாளரான Qingdao Seawin Biotech Group Co., Ltd நிறுவனம், இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக கோரியுள்ளது.

தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைக்கு கோரிக்கை கடிதம்  அனுப்பிய சீன நிறுவனம், அதற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதத்திற்கு 3 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

Qingdao Seawin Biotech Group Co., Ltd., நிறுவனம், 8 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு சேதத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது.

சீன கரிம உர உற்பத்தியாளரால் அனுப்பப்பட்ட நட்டஈட்டு கோரிக்கை கடிதத்தில், தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் கவனக்குறைவான நடத்தை காரணமாக, நற்பெயர் மற்றும் நல்லெண்ணம் மற்றும் ஏற்கனவே உள்ள மற்றும் சாத்தியமான வணிக இழப்பு காரணமாக நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நிறுவனத்தால் அனுப்பப்பட்ட கரிம உரம், இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியா இருப்பது தெரிய வந்தது. இரண்டு முறை சோதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, கரிம உரம் திருப்பி அனுப்பப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment