லெஜண்ட் சரவணன் படத்தில் ஊர்வசி ரவுடேலா ஒப்பந்தம்

Date:

லெஜண்ட் சரவணன் நடித்து வரும் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க ஊர்வசி ரவுடேலா ஒப்பந்தமாகியுள்ளார்.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவர் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்கள். கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் லெஜண்ட் சரவணனுக்கு நாயகியாகப் புதுமுகம் கீர்த்திகா திவாரி நடித்து வருகிறார். அவர் தவிர்த்து மற்றொரு நாயகி கதாபாத்திரம் இருப்பதாகவும், அதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். தற்போது அதில் ஊர்வசி ரவுடேலா ஒப்பந்தமாகி நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

மணலியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், தற்போது ஊர்வசி ரவுடேலா இருப்பதாக அவருடைய தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

லெஜண்ட் சரவணன், கீர்த்திகா திவாரி, ஊர்வசி ரவுடேலா ஆகியோருடன் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகரும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து வருகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்