25.4 C
Jaffna
March 7, 2025
Pagetamil
இலங்கை

சஹ்ரானை சந்தித்த 4 பேர் யார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமை, நான்கு மாலத்தீவு நபர்கள் சந்தித்து பேசியதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சஹ்ரான் மற்றும் சிலரை, மாலைதீவு நபர்கள் சந்தித்தார்கள். இந்த சந்திப்புக்கள் இலங்கையிலதான் நடந்தன என தெரிவித்தார்.

இந்த சந்திப்புகள் 2016 ஆம் ஆண்டிற்கும் 2019 ஏப்ரல் தாக்குதலுக்கும் முன்னதாகவும் நடந்ததாகக் கூறினார்.

நான்கு மாலைதீவு நபர்களும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டுள்ளதாக வீரசேகர கூறினார்.

அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட இரண்டு இலங்கையர்களின் மூலம், சஹ்ரானிற்கும், மாலைதீவு நபர்களிற்குமிடையில் தொடர்பு ஏற்பட்டது என்றார்.

ஹாஷிமுடன் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இலங்கையை தளமாகக் கொண்ட 11 அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

அத்துடன், சஹ்ரானிடம பயிற்சி எடுத்த பெண்களில் 15 பேர் கைது செய்யப்பட்டு, உயிரிழந்து விட்டனர். சாரா உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தத்தெடுத்த குழந்தை கொலை: தம்பதிக்கு மரணதண்டனை!

Pagetamil

சாணக்கியன் எழுப்பிய பாதுகாப்பு கவலைகள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்

Pagetamil

ஆபிரிக்க காய்ச்சல் பரவிய வடக்கின் 5 பன்றிப்பண்ணைகள் மூடல்

Pagetamil

தென்னக்கோன் பற்றி தகவலறிந்தால் சிஐடிக்கு அறிவிக்கவும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!