வெற்றுப் பால் போத்தல், சாராயப் போத்தலுடன் சபைக்கு சென்ற பிரதேசசபை உறுப்பினர்!

Date:

நாட்டில் அத்தியாவசிய தேவையான உணவுப்பொருட்களிற்கு தட்டுப்பாடு நிலவுவதையும், இந்த நெருக்கடிக்குள்ளும் மதுபான கடைகள் திறக்கப்பட்டதைம் சுட்டிக்காட்டி, பொம்மை, வெற்று பால் புட்டி, மதுபான போத்தலுடன் பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காலி மாவட்டத்தின், இமதுவ பிரதேசசபை அமர்வில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.

பிரதேசசபை அமர்வு ஆரம்பித்ததும், பொம்மை மற்றும் வெற்று பால் புட்டியுடன் சபை நடுவே எழுந்து வந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் அருண,  குழந்தை பாலின்றி அழுவதாகவும், அதற்கு பால் வேண்டுமென்றும் கூறினார்.

பிரதேசசபையின் ஆளுந்தரப்பான பொதுஜன பெரமுனவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். தவிசாளர் சரத் குமார, அவரை ஆசனத்தில் அமரும்படி வலியுறுத்தினார்.

எனினும், நாடு முழுவதும் குழந்தைகள்அழுது கொண்டிருப்பதாகவும், குழந்தைகளிற்கு எங்கே பால் வாங்கலாமென கேள்வியெழுப்பினார்.

அத்துடன், சாராயப் போத்தலை காட்டி, இது மட்டுமே நாட்டில் தாராளமாக கிடைப்பதாக குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்