பொட்ஸ்வானாவில் நடைபெற்ற ‘மிஸ் டீன் இன்டர்நஷனல் போட்ஸ்வானா 2021’ போட்டியில் இலங்கை -வம்சாவளியை சேர்ந்த கிம்ஹானி பெரேரா வெற்றி பெற்றுள்ளார்.
17 வயதான அவர் பிலிக்வே மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். நேற்று (19) இறுதிப் போட்டி நடந்தது.
நிகழ்வின் ஆரம்ப சுற்றுகளில் போட்டியிட்ட 42 போட்டியாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 போட்டியாளர்கள் நேற்றைய இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் கிம்ஹானி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
பொட்ஸ்வானாவின் பிலக்வேயை பூர்வீகமாகக் கொண்ட கிம்ஹானி, லிவிங்ஸ்டன் கோலோபெங் கல்லூரியில் பட்டதாரியாவார்.
கிம்ஹானி பெரேராவின் தந்தை, பந்தித்த பெரேரா, பொட்ஸ்வானா தொழிலதிபர் ஆவார். அவர் 1990 இல் பொட்ஸ்வானாவிற்கு குடிபெயர்ந்தார்.




