மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணொளி கலந்துரையாடலுக்கான இலத்திரனியல் சாதனங்கள் கையளிப்பு!

Date:

உள்ளுராட்சி சபைகளை இணையவழியில் மேம்படுத்தல் (CDLG) திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் UNDP நிறுவனத்தினரால் இன்று(18) பி.ப 2.00மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வைத்து காணொளி கலந்துரையாடலுக்கான தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனூடாக கொவிட் 19 இடர்கால சூழலில் கலந்துரையாடலகள் முதலான தொடர்பாடல் செயன்முறைகள் மற்றும் அரச சேவைகளை தடைகளின்றி வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்காகவே குறித்த இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன் மற்றும் UNDP நிறுவனத்தின் கள உத்தியோகத்தர்களான த.சதீசன், ந.வைதேகி, ரொ.பிரபாலினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

-சண்முகம் தவசீலன்-

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்