நிர்ணய விலைக்கு அதிகவிலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்!

Date:

வவுனியாவில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் விற்பனைசெய்யப்பட்ட ஒரு தொகை சீமேந்து மூடைகள் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் வீதியில் இன்று காலை லொறி ஒன்றில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்த சீமேந்து மூடைகள் தொடர்பாக வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் விசாரணையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சீமேந்து மூடைகளில் அச்சிடப்பட்டிருந்த விலைக்கு அதிகமாக அவை விற்பனை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக குறித்த முகவர் மீது வழக்குத்தாக்கலினை செய்த பாவனையாளர் அதிகாரசபை, ஏனைய சீமேந்து மூடைகள் அனைத்தையும் அதன் பெறுமதிக்கேற்ப்ப நிர்ணய விலையினை முகவரிடம் செலுத்தி, மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க திணைக்களங்களின் கட்டுமானத்தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்