கிளிநொச்சியில் 20-30 வயதிற்கிடைப்பட்டவர்களிற்கு திங்கள் முதல் தடுப்பூசி!

Date:

திங்கள் முதல் கிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரினருக்கு
முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம் மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர்
நிமால் அருமைநாதன்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த 20வயது தொடக்கம் 30வயதுப்பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

இன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20-30 வயதுப்பிரிவினர் 28482 பேர் உள்ளனர். அவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் திங்கட்கிழமை 20ம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் ஆதார
வைத்தியசாலை, பூநககரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

21ம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் உருத்திரபுரம்
பிரதேச வைத்தியசாலை, அக்கராயன் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா
வித்தியாலயம், முழங்காவில் ஆதார வைத்தியசாலை, தர்மபுரம் மத்தியகல்லூரி, பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும்
பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்