ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர்: நிர்வாகம் அறிவிப்பு!

Date:

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் உட்பட சில வீரர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 29 போட்டிகள்தான் நடத்தப்பட்டது. 31 போட்டிகள் எஞ்சியிருந்தது.

மீதமுள்ள இந்த 31 போட்டிகளும் எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்: நிர்வாகம் அறிவிப்பு!அக்டோபர் 15 வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட சில ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தனிமை முகாமில் இருக்கின்றன. சிஎஸ்கே விரைவில் பயிற்சியைத் துவங்கும் என எதிர்பார்க்கிறது. போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுவதில் எவ்வித சிக்கல் இருக்காது என கூறப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம், ஒரு சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆம், இந்தியாவில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்களுடன் நடைபெறும் என்ற அறிவிப்புதான் அது. இதுகுறித்துப் பேசிய ஐக்கிய அரபு அமீர கிரிக்கெட் வாரிய பொதுச் செயலாளர் உஸ்மானி, “ஐபிஎல் தொடரின்போது பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை வீரர்கள், ரசிகர்களின் பாதுகாப்புதான் முதன்மையானது. தற்போது அமீரகத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், ஐபிஎல் தொடரின்போது பார்வையாளர்களை அனுமதிக்க விரும்புகிறோம்.

நிச்சயம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பிசிசிஐயும் இதைத்தான் விரும்புகிறது” எனத் தெரிவித்தார். மொத்தம் 60 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச்...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஈரானின் இராணுவம் சனிக்கிழமையன்று ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதைத்...

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்