எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் அரச ஊழியர்கள் தங்களது மாத ஊதியத்தில் பாதியை அரசுக்கு நன்கொடையாக வழங்க ஒப்புக் கொண்டால் மட்டுமே நாடு 14 நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி கூறினார்.
அவ்வாறு நன்கொடை வழங்கப்பட்டால், தினசரி உழைப்பாளர்களாக வாழும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் நலனுக்காக பயன்படுத்தலாம் என்றார்.
களுத்துறையில் நேற்று (19) பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
நாடு முடக்கப்படுவது தொடர்பாக அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் அதிக விமர்சனங்களை தோற்றுவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



