டெல்டா பிளஸ் தொற்றால் 3 பேர் பலி அரசு எச்சரிக்கை!

Date:

மஹாராஷ்டிர மாநிலத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று காரணமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில

தலைநகர் மும்பையைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் மாநிலத்தில் உயிரிழந்த முதல் நபர் ஆவார். ராய்கட் மாவட்டத்தைச் சேர்ந்த வயது முதியவர், ரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஆகியோர் டெல்டா பிளஸ் வகை தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, உயிரிழந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா தடுப்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பொது மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கும்படி சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு...

“நம்மைவிட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே தவெக கூடுதலாக பெற்றுள்ளது” – மு.க.ஸ்டாலின்

‘கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம்...

மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்